செந்தமிழ் விரகர் திருமன்றமானது அமெரிக்காவில் முதன்முதலில் துவங்கப்பட்ட சைவ மன்றமாகும்.
இதுவரை இம்மன்றம் 100க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வியல் சடங்குகளை நடத்திக்கொடுத்துள்ளது. இம்மன்றத்தில் இயங்கும் தன்னார்வலர்கள் இரவு பகல் பாராது தமிழர்களுக்கு சேவை ஆற்றி இத்திருமன்ற வளர்ச்சிக்கு உழைத்து வருகிறார்கள்.
தமிழ்ச் சமூகத்தின் உழைப்போடும், ஆதரவோடும், நிதிப்பங்களிப்போடும் இம்மன்றம் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. திருமன்றம் சார்பாக தமிழ்ச் சமூகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.